சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.சென்னை காமராஜர் சாலையில் உள்ள
லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் இந்தப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். மொத்தம் 40 நாள்களுக்குஇப்பயிற்சி வழங்கப்பட உள்ளதுஇதில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை வரை மாநிலம் முழுவதும் 652 பேர் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் 250 பேர் பதிவு செய்துள்ளனர். வரும் நாள்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்தப் பயிற்சியில் மேலும் இணைவார்கள்என எதிர்பார்ப்பதாக கண்ணப்பன் கூறினார்.பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் மார்ச் 5-ம் தேதி தொடங்குகிறது.இந்தத் தேர்வை எழுதுவோருக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், உளவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம் ஆகிய பாடங்கள் தொடர்பாக இந்தப் பயிற்சியில் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன. கல்லூரி விரிவுரையாளர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், பாடவல்லுநர்கள் பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனர்.சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் உத்ராபதி, பிரசன்னகுமார் ஆகிய இரண்டு பார்வையற்ற மாற்றுத் திறனுடைய விரிவுரையாளர்கள் இந்த தேர்வர்களுக்காக பயிற்சி அளிக்க தாமாகவே முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பயிற்சி நடைபெறும் 40 நாள்களுக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உணவும், தேநீர் மற்றும் சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படும்.இந்தப் பயிற்சியில் இணைய விரும்பும் மாற்றுத் திறனாளிகள் அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களையோ அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்கள் உமா, ஸ்ரீதேவி, சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ஆர்.ஐயப்பன் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி