பள்ளி கல்விக்கான நிதிஒதுக்கீடு சரிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

பள்ளி கல்விக்கான நிதிஒதுக்கீடு சரிவு


பள்ளி கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அளவு, கடந்த ஆண்டை விட வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 2,412 கோடி ரூபாய் அதிகரித்த நிலையில் இந்த ஆண்டு வெறும், 766 கோடி தான் அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த, மூன்று ஆண்டுகளில், பள்ளி கல்விக்கானநிதி ஒதுக்கீடு, கணிசமாக அதிகரித்து வந்தது.

2011-12ம் ஆண்டில் 13,000 கோடி; 2012-13ம் ஆண்டில் 15,000 கோடி; 2013-14ம் ஆண்டில் 17,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இருந்தது. படிப்படியாக, நிதி அதிகரித்து வந்ததால், நடப்பு ஆண்டில் 19 ஆயிரம்கோடி வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.சென்னையில் நடந்த ஒரு விழாவில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவும், இதை சூசகமாக தெரிவித்தார். ஆனால், மூன்று ஆண்டுக்கான கூடுதல் நிதி அதிகரிப்பு இந்த ஆண்டு தடாலடியாக சரிந்துள்ளது. நடப்பு ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கு, கடந்த ஆண்டை விட 766 கோடி ரூபாய் தான் அதிகம்.புதிய அறிவிப்புகள் இல்லை: வழக்கமாக புதிய பள்ளிகள் திறப்பு, ஆசிரியர் நியமனம்,மாணவர்களுக்கான புதிய இலவச திட்டங்கள் என, பல அறிவிப்புகள் இடம்பெறும். அதுபோல், எதுவும் இடம்பெறவில்லை. "பள்ளிகளின் கட்டமைப்பிற்கு, நபார்டு மூலம், ரூ.250 கோடி செலவு செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதி அதிகரிப்பு சரிவு மற்றும் புதிய திட்டங்கள் இல்லாதது குறித்து, அதிகாரிகள்சிலர் கூறியதாவது: ஏற்கனவே, ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு, போதும் போதும் என்ற அளவிற்கு, 14 பொருட்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன.மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு மூலம், 44 மாதிரிப் பள்ளிகள், அரசு பள்ளிகளில், கூடுதல் கட்டட வசதி, வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும், 100 சதவீத குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு மேலும், புதிதாக செயல் படுத்துவதற்கு என எதுவும் இல்லை. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி