"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்.


"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம், தேர்வு பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாதசூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், வகுப்பு களை ஒருங்கிணைந்து பயிலும், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம்,

முதற்கட்டமாக, 160 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில், திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான, நிதி ஒதுக்கீடு, உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளால், தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், பிப்., 19ல், தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் முறையில், இத்திட்டத்தை துவக்கி வைத்தார். மார்ச், 7ம் தேதி, பயிற்சி வகுப்புநடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள, 160 வகுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அம்மாணவர்களின் சந்தேகம் உள்ளிட்டவைகளை போக்கும் வகையில், நிபுணர்கள் மூலம் பாடம் நடத்தப்படும்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், "தற்போது, பிளஸ் 2, 10ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதால், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டத்தை, செயல் படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுஉள்ளது. எனவே, இத்திட்டத்தை, அடுத்த கல்வியாண்டில் தான் முழுமையாக செயல்படுத்த முடியும்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி