10ம் வகுப்பு தனித்தேர்வருக்கு மார்ச் 18 முதல் செய்முறை தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2014

10ம் வகுப்பு தனித்தேர்வருக்கு மார்ச் 18 முதல் செய்முறை தேர்வு.


10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 18 முதல், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடக்கவுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 26 முதல், ஏப்., 9ம் தேதி வரை நடக்கிறது.
சமச்சீர் கல்வி முறையில், 10ம் வகுப்பில், செய்முறை தேர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகளில் செய்முறை பயிற்சியும், தேர்வும் நடத்தப்படுகிறது. தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு, வரும் 18 முதல், 22ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக, தனித்தேர்வர்கள், பயிற்சி பெற்ற மையங்களில், மார்ச்,17ம் தேதி, பெயரை பதிவு செய்து, தேர்வு நடைபெறும் நாளை தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி