10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்ய சென்னையில் 4 மையங்கள் அமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்ய சென்னையில் 4 மையங்கள் அமைப்பு.


பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க, சென்னையில், நான்கு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும்,
26ம் தேதியில் இருந்து, ஏப்., 9ம் தேதி வரை, 10ம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவ, மாணவியர், "தத்கல்'திட்டத்தில், இணையதளம் வழியாக பதிவு செய்ய, மாவட்ட வாரியாக, சிறப்பு மையங்களை, தேர்வுத்துறை அமைத்துள்ளது.

இன்றும், நாளையும், குறிப்பிட்ட மையங்களுக்கு சென்று, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.சென்னையில், அமைக்கப்பட்டுள்ள நான்கு மையங்கள் விவரம்:தென்சென்னை கல்வி மாவட்டம் - ஜெனரல் கரியப்பா மேல்நிலைப்பள்ளி, சாலிகிராமம்மத்திய சென்னை கல்வி மாவட்டம் - ராணி லேடி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,அடையாறுகிழக்கு சென்னை கல்வி மாவட்டம் - கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கல்மண்டபம் அருகில், ராயபுரம்வடசென்னை கல்வி மாவட்டம் - டான்பாஸ்கோ உயர்நிலைப்பள்ளி, வேப்பேரி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி