தனியாரிடம் "தத்கால்' முறையில் விண்ணப்பிக்காதீர்கள்: தேர்வு துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

தனியாரிடம் "தத்கால்' முறையில் விண்ணப்பிக்காதீர்கள்: தேர்வு துறை


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான, "தத்கால்' முறையின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளம் மூலம்விண்ணப்பிக்கலாம்.
ஆனால், தனியார், பதிவிறக்க மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டாம்,'' என, அரசு தேர்வு துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.அவரது உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: வரும், 26ல் துவங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், "தத்கால்' திட்டத்தின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கென, மாவட்ட தலைநகரங்களில், சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மைய விவரங்களை, தீதீதீ.tணtஞ்ஞு.டிண என்ற இணையதளம், முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் அறிந்து கொள்ளலாம்.

தனியார் பதிவிறக்க மையங்கள் மூலம், விண்ணணப்பிக்க வேண்டாம். உரிய சான்றிதழ்களுடன், தேர்வுக் கட்டணம் 125 ரூபாய், சிறப்பு அனுமதி கட்டணம், 500 ரூபாய், ஆன்--லைன்பதிவுக் கட்டணம், 50 ரூபாய் என, 675 ரூபாயை, பணமாக செலுத்த வேண்டும். இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய நாட்கள் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும். அதில், தேர்வு மைய விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி