Public Exam Time Management
பரிட்சை முடித்துவிட்டுப் பின்பு பார்த்தால், எதையாவது எழுதாமல் வந்துவிட்டதை நினைத்து வருந்துவார்கள். இது ஒரு ரகம். இன்னொரு ரகம் ஒன்று இருக்கிறது. காலம் இருக்கிறது என்று மெதுவாக எழுதுவார்கள். காலம் முடிந்தபின் பார்த்தால் சில வினாக்கள் எழுத அவகாசம் இல்லாமல்போய் வருத்தமடைவார்கள். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுதி முடித்துவிட்டு, எழுதியதைச் சரிபார்த்து சந்தோஷமடையும் ரகமே சிறந்த ரகம். எப்படி இந்த ரக மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள்?
2.30 மணிநேரம் இருக்கிறது என்று முழுவதும் பயன்படுத்தாமல், 2.15 மணித்துளிகளில் திட்டமிட்டு எழுதி முடித்துவிடவேண்டும். எப்படி? ஒவ்வொரு அலகிற்கும், வினாவிற்குமான எழுதும் நேரத்தைத் திட்டமிடவேண்டும். வீட்டில், முன்கூட்டியே முழு வினாத்தாளையும் தேர்வாகப் பாவித்து விடை எழுதி பார்த்தால் இந்தப் பிரச்னை வராது.வினாவின் தன்மையை வைத்து அதற்கான கால அளவைத் திட்டமிடுவது மட்டுமல்லாமல், எழுதியதை வாசிக்க, சரிசெய்ய காலத்தை ஒதுக்கவேண்டும். அதைத்தான் இப்பொழுது தமிழ்த்தாளுக்காகப் பார்க்கப்போகிறோம்.
தமிழ் முதல் தாள்
1. உரிய விடையைத் தேர்ந்தெடுத்தல் 2 நிமிஷம்
2. கோடிட்ட இடம் 2 நிமிஷம்
3. பொருத்துக 2 நிமிஷம்
4. வினா அமைத்தல் 4 நிமிஷம்
5. குறுவினா செய்யுள் (21-27) (5 மட்டும்) 15 நிமிஷம்
6. குறுவினா உரைநடை(28-34) (5 மட்டும்) 15 நிமிஷம்
7. சிறுவினா செய்யுள் (35-39) (3 மட்டும்) 15 நிமிஷம்
8. சிறுவினா உரைநடை (40-44) (3 மட்டும்) 15 நிமிஷம்
9. பாடல் வினா விடை 5 நிமிஷம்
10. உரைநடை வினாவிடை 5 நிமிஷம்
11. நெடுவினா (47, 48) 40 நிமிஷம்
12. மனப்பாடம் (49) 15 நிமிஷம்
13. விடைத்தாளைச் சரிபார்த்தல், திருத்துதல் 15 நிமிஷம்
தமிழ் இரண்டாம் தாள்
1. உரிய விடையைத் தேர்ந்தெடுத்தல் 2 நிமிஷம்
2. கோடிட்ட இடம் 2 நிமிஷம்
3. சுருக்கமான விடையளி 8 நிமிஷம்
4. குறுவினா (21-27) (5 மட்டும்) 15 நிமிஷம்
5. 5 மதிப்பெண் அணி, அலகிடுதல் (28-30) (2 மட்டும்) 10 நிமிஷம்
6. துணைப்பாடக்கட்டுரை (31-33) (2 மட்டும்) 20 நிமிஷம்
7. மொழியாக்கம் (34-35) (4 மட்டும்) 15 நிமிஷம்
8. கதை அல்லது கவிதை (36) 5 நிமிஷம்
9. பாடல் நயம் 10 நிமிஷம்
10. வங்கிப் படிவம் (38) 3 நிமிஷம்
11. சூழல் வினா- விடை (39) 5 நிமிஷம்
12. கடிதம் எழுதுதல் (40) 10 நிமிஷம்
13. கட்டுரை (41) 30 நிமிஷம்
14. விடைத்தாளைச் சரிபார்த்தல், திருத்துதல் 15 நிமிஷம்
தேர்வு அறையில்...
1. தேர்வு அறையில் வினாத்தாளைக் கையில் படப்படப்புடன் வாங்கத் தேவையில்லை. வினாத்தாள் கைக்கு வருவதற்கு முன்பாக, “எனக்கு அளிக்கப்படும் வினாத்தாளில் உள்ள வினாக்கள் எனக்குத் தெரிந்தவை. நான் படித்தவை. அதனால் வினாத்தாள் எளிமையாகவே இருக்கும்“ என்று கண்ணை மூடிக்கொண்டு மனதிற்குள் உறுதியும் தன்னம்பிக்கையும் கொள்ளவேண்டும்.
2. வினாத்தாளைப் படப்படவெனப் புரட்டாமல், உங்களுக்குத் தெரிந்த வினாக்களைக் கண்ணில் பதியும்படி பார்க்கவும். மன ரீதியாக இந்தச் செயல் சந்தோஷம் தரும்.
3. வினாத்தாளில் நீங்கள் எழுதப்போகும் வினாக்களை மனதில் டிக் செய்யுங்கள். பிறகு, அவற்றிற்கான விடைகளை மனதில் வேகமாகவும் தெளிவாகவும் சொல்லிப் பாருங்கள்.
4. முதலில் தெரிந்த வினாக்களை எழுதிவி
please upload time management for other subjects also
ReplyDeleteVery useful to student to get full mark.
ReplyDeleteVery useful to student to get full mark.
ReplyDeleteVery useful to student to get full mark.
ReplyDelete