ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம், தேர்தல் கமிஷன் முடிவு: காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2014

ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம், தேர்தல் கமிஷன் முடிவு: காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு.


ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தல், அடுத்த மாதம் 7–ந்தேதி தொடங்கி, மே 12–ந்தேதிவரை 9 கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மொத்தம் 9 மணி நேரம் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், தேர்தல் கமிஷனர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.நேரம் அதிகரிப்புஇந்நிலையில், ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதாவது, காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறும். எனவே, 11 மணி நேரம், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.ஆனால், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும்.

அதாவது, 9 மணி நேரம்தான், அந்த பகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.இத்தகவல்களை தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.அசாமில் முகாமிட்டுள்ள தேர்தல் கமிஷனர்கள் டெல்லிக்கு திரும்பி வந்த பிறகு, இந்த முடிவுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பார்கள். அதன்பின்னர், இம்முடிவு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

காரணம் என்ன?

கடந்த பாராளுமன்ற தேர்தலை விட, தற்போது கூடுதலாக 10 கோடி புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். சமீபகாலமாக, தேர்தல்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்து வருகிறது.

ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்தில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காண முடிகிறது.மேலும், இந்த தேர்தல், நல்ல வெயில் காலத்தில் நடைபெறுவதால், வாக்காளர்கள் மாலை நேரத்தில் வெயில் தணிந்த பிறகே வாக்களிக்க வர வாய்ப்புள்ளது.இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான், ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி