பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்: 24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2014

பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்: 24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


நாட்டின் பொதுத் துறை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான, பி.எஸ்.என்எல்., லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி, கவுதம் சக்கரவர்த்தி கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களின், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட்லைனுக்கான, "ஒன் இந்தியா ஒன் பிளான்' மாதக் கட்டணம், 180 ரூபாயில்இருந்து, 195 ரூபாயாகஉயர்த்தப் பட்டுள்ளது. பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. பிளான்களுக்கு தகுந்தவாறு, 24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி