பொறியியல் கல்லூரியில் சேர மே முதல் விண்ணப்பம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2014

பொறியியல் கல்லூரியில் சேர மே முதல் விண்ணப்பம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மே மாதம் பத்தாம் தேதிக்குள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு, விண்ணப்ப விநியோகம் தொடங்கும் உறுதியானதேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் மூன்றாம் வாரத்தில் கலந்தாய்வுகள் தொடங்கி ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு முடிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆகஸ்ட் 1ம் தேதி இந்தக் கல்வியாண்டிற்கான பொறியியல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி