பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்விமுறை இல்லை: அவகாசம் இல்லாததால் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2014

பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்விமுறை இல்லை: அவகாசம் இல்லாததால் முடிவு


பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படாது. தற்போது உள்ள நடைமுறையே, வரும் ஆண்டிலும் தொடரும்' என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
தற்போது, ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, அமலில் உள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கான பாடத்திட்டமும், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு, 60 மதிப்பெண், மாணவர்களின் செயல்திறன்நடவடிக்கைகளுக்கு, 40 மதிப்பெண் என, பிரித்து, தேர்வு நடத்தப்படுகிறது. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான கோப்பு, முதல்வர் அலுவலகத்திற்கு சென்று, பல மாதங்கள் கரைந்த நிலையில், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே, புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்கு, இன்னும், இரண்டு மாதமே உள்ளது. ஜூன் முதல் வாரம், 2014 - 15 கல்வி ஆண்டு துவங்குகிறது.

இரு மாதத்திற்குள், முப்பருவ கல்வி முறைக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை உருவாக்க முடியாத நிலை உள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டிலும், தற்போதுள்ள முறையை, தொடர்ந்து கடைபிடிக்க, அரசு முடிவெடுத்து உள்ளதாக, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது. இதற்கு ஏதுவாக, பழைய பாட புத்தகங்களை அச்சடிக்க, பாடநூல் கழகத்திற்கு, அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி