பணி விடுவிப்பை எதிர்த்து பெண் விரிவுரையாளர் வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2014

பணி விடுவிப்பை எதிர்த்து பெண் விரிவுரையாளர் வழக்கு.


பணி விடுவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் கல்லூரியின் பெண் விரிவுரையாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை, லயோலா கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய பெண் ஒருவர் அதே கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்புகார் கூறினார். அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: "பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன். உயர் நீதிமன்றமும் இம்மாதம் 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில், என்னை பணியில் இருந்து விடுவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், எந்த காரணங்களையும் தெரிவிக்கவில்லை.

இயற்கை நியதி பின்பற்றப்படவில்லை. எனவே, பணியில் தொடர கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். பணி விடுவிப்பை ரத்து செய்ய வேண்டும்." இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆஜரானார். மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி அரசுக்கும், லயோலா கல்லூரியின் செயலருக்கும் "நோட்டீஸ்" அனுப்ப நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி