பத்தாம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து 10ம் தேதி முதல்விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். மொழித்தாள்கள்,கணக்கு பாடங்களுக்கான தேர்வுகள் 4ம் தேதியுடன் முடிந்தன. நேற்று அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு, நாளை சமூக அறிவியல் பாடத் தேர்வு நடக்கிறது. அந்த தேர்வுடன் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிகின்றன.தற்போது பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 66 மையங்களில் நடக்கிறது. மொழித்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற பாடங்களில் ஒரு சில பாடங்கள் திருத்தி முடிந்துள்ள நிலையில் 10ம் தேதிக்குள் திருத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதால் 10ம் தேதியுடன் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அதே விடைத்தாள் திருத்தும் மையங்களில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத் தவும் உத்தரவிடப்பட்டுள் ளது. இந்த பணி 22ம் தேதியுடன் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லும் பணி நடக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி