மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதே போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை சம்பள உயர்வு கிடைக்கும்.இந்த அகவிலைப்படி 1.1.2014 முதல் கணக்கிட்டு 3 மாத நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம் 15 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பலன் அடைவார்கள்.தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் இதற்கான அரசு ஆணையை பிறப்பித்துள்ளார்.ஏற்கனவே 90 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது 100 சதவீதமாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி