சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2014

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு.


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக, இம்மாதம் இறுதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
இந்த தகவலை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.,), அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 1ல் துவங்கியது. 10ம் வகுப்பு தேர்வு மட்டும், ஏற்கனவே திட்டமிட்டபடி, கடந்த மாதம், 19ம் தேதியுடன் முடிந்துவிட்டது. பிளஸ்2 தேர்வு, ஏப்., 17ம் தேதி வரை நடப்பதாக, ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தேர்தல் காரணமாக, 30 பாடங்களுக்கான தேர்வுகள், இம்மாதம், 19, 21, 22, 25 ஆகிய தேதிகளுக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷர்மா அறிவித்து உள்ளார். உருது விருப்பப்பாடம் உள்ளிட்ட, எட்டு தேர்வுகள், ஏப்., 9க்குப் பதில், 25ம் தேதி நடக்கிறது; ஏப்., 10ம் தேதி நடக்க இருந்த, சமூக அறிவியல் உள்ளிட்ட, நான்கு தேர்வுகள், 21ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளது; 12ம் தேதி நடக்க இருந்த, தத்துவவியல் உள்ளிட்ட தேர்வுகள், 19ம் தேதிக்கும்; 17ம் தேதி நடக்க இருந்த, வேளாண்மை, ஓவியம், "கிராபிக்ஸ்' உள்ளிட்ட தேர்வுகள், 22ம் தேதிக்கும், தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி