டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
இதில் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு கடிதத்தை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் வழங்கி கலந்தாய்வைத் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் 348 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.இளநிலை உதவியாளர் பணிக்கு மொத்தம் 3 ஆயிரத்து 704 இடங்களுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது.இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வுக்கு பின், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
அப்போ பணிநியமன ஆணை எப்பொழுது வழங்கப்படும்.
ReplyDelete