சுப்ரீம் கோர்ட்டின், புதியதலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2014

சுப்ரீம் கோர்ட்டின், புதியதலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா


சுப்ரீம் கோர்ட்டின், புதியதலைமை நீதிபதியாக,ஆர்.எம்.லோதா நியமிக்க பட்டுள்ளார்.இம்மாதம் 27ல், அவர் பதவி ஏற்கிறார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக,தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவர் பதவியில் இருந்து, விரைவில் ஓய்வுபெற உள்ளார்.சதாசிவத்தை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், மூத்த நீதிபதியாக உள்ளவர் லோதா, 64.புதியதலைமை நீதிபதி பதவிக்கு இவர் பெயரை, தலைமை நீதிபதி சதாசிவம் பரிந்துரை செய்துள்ளார்.இதைத் தொடர்ந்து, லோதாவை, புதிய தலைமை நீதிபதியாக, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நேற்று நியமித்துள்ளார்; இதற்கான அறிவிப்பை,சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இம்மாதம் 27ல்,புதிய தலைமை நீதிபதியாக, லோதா பதவியேற்க உள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் 27ல், இவர் ஓய்வு பெறஉள்ளதால், ஐந்து மாதங்கள் மட்டுமே பதவி வகிப்பார். இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தந்தை,ராஜஸ்தான்உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். 2008 முதல், சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி