எம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2014

எம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோர்ட் உத்தரவு.


ஏழு தனியார் கல்லூரிகளில், எம்.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர் கல்வி பல்கலை, ஒப்புதல் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.எட்., வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள், 2012, ஏப்ரல், 1ம் தேதிக்குமுன், தேசிய தர மதிப்பீட்டு குழுவிடம், சான்றிதழ் பெற இணையம் மூலம், விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், எட்டு மாதங்களாக இணையம் செயல்படாததால், கல்லூரிகளால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதற்கிடையில், கட் - ஆப் தேதிக்குள் விண்ணப்பிக்கவில்லை எனக்கூறி, எம்.எட்., வகுப்பில் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்றும், பி.எட்., வகுப்பில், கூடுதல் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்றும், ஆசிரியர் கல்வி பல்கலை உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், 2013-14ம் ஆண்டுக்கு, எம்.எட்., படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை, நீதிபதி டி.ராஜா விசாரித்து, பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் கல்வி பல்கலையின் உத்தரவுகள், ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களின் கல்லூரிகளில், 2013-14ம் ஆண்டில், எம்.எட்., வகுப்பில், மாணவர்கள் சேர்க்கைக்கு, பல்கலைகழகம் ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி