டிப்ளமோ முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2014

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி


விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Scientific Assistant/ B (Civil) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 11

பணி: Scientist Assistant/B (Civil)

கல்வி தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15.04.2014 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Screening Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு தேவையான சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் (அட்டெஸ்ட் பெற்றது) எடுத்துக் கொண்டு ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி