தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி துவங்கியது. இந்தத் தேர்வுகள்நேற்றுடன்நிறைவுபெற்றது.
பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிஇன்றுமுதல் துவங்குகிறது. இதில் 750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 23-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தமிழக அளவில் பெரும்பாலான பள்ளிகளில் மற்ற பாடங்களைக் காட்டிலும் கடந்த ஆண்டு தமிழ் பாடத்தில்தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் குறைவாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களின் வினாத்தாள்கள் ஓரளவிற்கு சுலபமாகவே இருந்தது. மேலும் 75 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம் தேர்வு எழுதும் அறிவியல் பாடத்திலும் கேள்விகள் சுலபமாகவே இருந்ததாக மாணவர்கள் கூறினர். இதே நிலை தான் சமூக அறிவியல் பாடத்திலும் சுலபமான வினாக்கள்கேட்கப்பட்டிருந்தன.ஆனால் கணித பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறுவதே சிரமம் என்று கருதக்கூடிய மாணர்வர்கள் அவசியம் படித்து வைத்திருந்து எதிர்பார்த்த வினாக்களான, வர்க்கமூலம் மற்றும் கணமூலம் வினாக்கள் கூட தவிர்க்கப்பட்டு வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டாய வினாவும் புத்திசாலி மாணவர்கள்மட்டுமே நன்கு தயார் செய்து வைத்திருந்த வினாவாக கேட்கப்பட்டிருந்தது. இதனால் கணித பாடத்தில் 100 க்கு 100 பெறுவோரின் சதவீதம் மிக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை நிர்ணயிக்கக்கூடிய பாடமாக கணிதம் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி