தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.
இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:
மாவட்டம் தேர்ச்சி /விகிதம் (%) /பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு 97.88 334
கன்னியாகுமரி 97.78 391
நாமக்கல் 96.58 298
விருதுநகர் 96.55 325
கோயம்பத்தூர் 95.6 502
கிருஷ்ணகிரி 94.58 356
திருப்பூர் 94.38 312
தூத்துக்குடி 94.22 278
சிவகங்கை 93.44 256
சென்னை 93.42 589
மதுரை 93.13 449
ராமநாதபுரம் 93.11 227
கரூர் 92.71 180
ஊட்டி 92.69 177
தஞ்சாவூர் 92.59 390
திருச்சி 92.45 396
பெரம்பலூர் 92.33 124
திருநெல்வேலி 91.98 448
சேலம் 91.89 473
புதுச்சேரி 91.69 279
தர்மபுரி 91.66 285
புதுக்கோட்டை 90.48 295
திண்டுக்கல் 89.84 317
திருவள்ளூர் 89.19 580
காஞ்சிபுரம் 89.17 565
தேனி 87.66 184
வேலூர் 87.35 566
அரியலூர் 84.18 149
திருவாரூர் 84.13 203
கடலூர் 83.71 385
விழுப்புரம் 82.66 534
நாகப்பட்டினம் 82.28 263
திருவண்ணாமலை 77.84 450
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 10 மணிக்கு முன்பே வெளியிட்ட பள்ளிகள்
ReplyDelete-- தின மணி
இன்று காலை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், தமிழக கல்வித் துறை இயக்குநரகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் இன்று காலை கல்வித்துறை இயக்குநரால் 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் இணையதளத்திலும் வெளியானது.
பொதுவாக தேர்வு முடிவுகள் அடங்கிய பெட்டிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் காலை 8 மணிக்கே வழங்கப்பட்டு விடும். அரசு முடிவுகளை வெளியிட்ட பிறகு தான் அனைத்துப் பள்ளிகளும் தங்களுக்கான பெட்டிகளை பிரித்து வெளியிட வேண்டும்.
ஆனால், புதுக்கோட்டையில் உள்ள சில தனியார் பள்ளிகள் காலை 8.30 மணிக்கே தங்களுக்கு வழங்கப்பட்ட கவர்களை பிரித்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விவரம் முன்கூட்டியே தெரிய வந்தது. இதேபோல 2 வாரங்களுக்கு முன்பு வெளியான +2 தேர்வு முடிவுகளும் இப்பள்ளிகளில் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன