சி.பி.எஸ்.இ.12–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2014

சி.பி.எஸ்.இ.12–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.


சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவ– மாணவிகளின் முடிவுகளை இணையதளத்தில் பகல் 12 மணிக்கு மத்திய வாரியம் வெளியிட்டது.
www.CBSE.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவ– மாணவிகள் தங்களது‘ரோல் எண்’ மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவுகள் உள்ளிட்ட 8 மாநில பிரதேசங்கள் அடங்கும். தமிழ்நாட்டில் 400 சி.பி.எஸ்.இ.பள்ளிகள் உள்ளன.இதில் ஆயிரக்கணக்கான மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினர். சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முறை இந்த ஆண்டு தாமதமாக வெளியாகி உள்ளது.என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கி தேர்வு முடிவு எப்போது வரும் என்று காத்திருந்தனர்.இந்த நிலையில் தேர்வு முடிவு இன்று வெளியானதால் மாணவ– மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேர்வு முடிவு பற்றிய முழுவவிவரம், மதிப்பெண் சான்றிதழ் போன்றவை அந்தந்த பள்ளிகளுக்கு இன்று மாலைக்குள்சென்று விடும்.மாணவர்கள் தேர்ச்சி விகிதம், தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்கள் நாளை வெளியிடப்படுகிறது.சென்னை மண்டல இயக்குனர் தேர்வு முடிவு பற்றிய முழு விவரங்களை நாளை அறிவிக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி