எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2014

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம்.


பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணி தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும்.இதற்கிடையே எம்.பி. பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் விண்ணப்பங்கள்வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பங்களை வரும் 14–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை பெறலாம்.கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2–ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும்.இதுதொடர்பான மேலும் கூடுதல் தகவல்களை www.tnhelath.org மற்றும் www.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி