பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு.


தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ல் வெளியிடப்பட்டது. இதில் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல் கேட்டும் மாணவர்கள் தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் விடைத்தாள் நகல் கேட்டு 87 ஆயிரம் பேரும் மறு கூட்டல் கேட்டு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.இந்த பணிகளுக்காக பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கருப்பசாமி தலைமையிலும், மதுரை முதன்மை கல்வி அதிகாரி அமுதாராணி கண்காணிப்பில், 200 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இவர்கள் 95 சதவீத பணிகள் நிறவு செய்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்களை மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறது.மறு கூட்டல் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் பணிகள் முடித்து மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்கப்படும், என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 comment:

  1. விடை தாள் நகல் இன்னும் வெளிவரவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி