தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு“ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு“


“தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.
கர்நாடக இசை உலகில் உன்னதமான இடத்தைப்பெற்றது தஞ்சாவூர் வீணை. தஞ்சையில் 17ம் நுற்றாண்டில் ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில் புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது.இதனால், தஞ்சாவூர் வீணை என்றும், ரகு நாதவீணை என்றும் பெயர் பெற்றது. 40 ஆண்டு விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில் இருந்து வீணை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுஉள்ளது.தஞ்சாவூரில் அறிவுசார் சொத்துரிமை பேரவை தலைவர் சஞ்சய்காந்தி கூறியதாவது. கலைஞர்களையும், பாரம்பரிய கலையையும் பாதுகாக்கத்தான், அரசுஇந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது.

அதன்படி, தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. துவக்கத்தில் ஒவ்வொரு ராகங்களுக்கும்ஒரு வீணை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின், 17ம் நூற்றாண்டில், தஞ்சைஆண்ட ரகுநாத மன்னர் ஆட்சியின் போது, அனைத்து ராகங்களும் இசைக்க கூடிய வகையில் ஒரு வீணை தயாரிக்கப்பட்டது. தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், தஞ்சாவூர் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பல்வேறு கைவினை மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தஞ்சை நெல் மாலை, தஞ்சை சீரகசம்பா, கும்பகோணம் வெற்றிலை, திருபுவனம் பட்டு, திருவையாறு அசோக அல்வா, தஞ்சை மரக்குதிரை, தஞ்சை ஓவியம் ஆகியவற்றுக்கும்புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி