இன்று ( 21.05.14) பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2014

இன்று ( 21.05.14) பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்.


பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் ( 21.05.14) புதன்கிழமை காலை 9 மணியளவில் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கவுள்ளது.
அந்தந்த பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்டகல்வித் துறையால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கு முன்பு அனைத்து சான்றிதழ்களையும் மிக கவனமாக சரிபார்க்கவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் பிழை இருப்பின் அந்த பிழையுள்ள சான்றிதழை உடனடியாக ஒப்படைத்து திங்கள்கிழமை மாலைக்குள் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.அப்படி பிழை உள்ள சான்றிதழ்கள் மாவட்ட கல்வித் துறையால் பெறப்படும் நிலையில் மறுநாளே புதிய சான்றிதழ் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட பள்ளிக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர்களிடம் சான்றிதழ் விநியோகம் செய்யும்போது எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது -அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி