பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அரசு பள்ளிகளில் ஆய்வு : கல்வித்துறை நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அரசு பள்ளிகளில் ஆய்வு : கல்வித்துறை நடவடிக்கை.


பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தாலும், சில பள்ளிகளின், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கடந்தாண்டை விடஇந்தாண்டு குறைந்துவிட்டது. போதிய ஆசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால், முக்கிய பாடங்களில், மாணவர்களால் அதிக மதிப்பெண்களை பெறமுடியாமல் போனது. இந்நிலையில், மாவட்ட வாரியாக, அனைத்து அரசு பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் குறித்து ஆய்வு செய்ய, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசு பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் என்ன? கடந்தாண்டை விட குறைந்ததா, அதிகரித்ததா? குறைந்திருந்தால், அதற்கு தலைமையாசிரியர் கூறும் விளக்கம் என்ன, அதை, அடுத்தாண்டு அதிகப்படுத்துவது எப்படி போன்ற விவரங்கள் ஆராயப்பட உள்ளன.அதுகுறித்த அறிக்கையை, தலைமையாசிரியர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியிடம் அளிப்பர். அந்த அறிக்கை, பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில், சென்னையில், விரைவில், உயரதிகாரிகளின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்,என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி