பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் 9 கிளை நூலகங்களில் இலவசமாக பார்த்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை வெளியிடப்பட உள்ள நிலையில் தேர்வு முடிவுகளை மாவட்ட மைய நூலகம் மற்றும் புத்தூர், வரகனேரி, ஆலத்தூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, தொட்டியம் கிளை நூலகங்களில் மாணவ, மாணவிகள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.மேலும் மதிப்பெண் பட்டியலையும் இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுமுடிவுகள் வெளியாகும் நாளிலிருந்து 3 நாள்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படும் என அச்செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி