தேர்தல் பணியின் போது இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2014

தேர்தல் பணியின் போது இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்.


தமிழகத்தில் தேர்தல் பணியின் போது இறந்த, மூன்று பேரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: கடந்த தேர்தல் வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பணியின் போது இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு முன், நிவாரணத்தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில், லோக்சபா தேர்தல் பணியின் போது, மூன்று ஊழியர்கள் இறந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், சிறப்பு இளைஞர் காவல் படையை சேர்ந்த வினோத்குமார், ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்களை பிடிக்க, விரட்டி சென்றபோது, தரைக் கிணற்றில், தவறி விழுந்து இறந்தார்.

சேலம் மாவட்டத்தில், ஓட்டுப் பதிவு முடிந்த பிறகு, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கராசு, மாரடைப்பால் இறந்தார். வேலூர் மாவட்டத்தில், தேர்தல் பணி முடிந்து, வீடு திரும்பிய, ஆசிரியை பூங்கொடி, ரயில் மோதி இறந்தார்.இந்த மூன்று சம்பவங்களும் துரதிருஷ்டவசமானவை. அவர்களின் குடும்பத்திற்கு, தலா, 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும், என்றார்.

1 comment:

  1. வீட்டுக்கு போய் கொடுங்க...நீங்க நல்லா இருப்பீங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி