தபால் ஓட்டு கோரி விண்ணப்பித்தவர்களில், 30 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது:
தேர்தல் பணியில், 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். இவர்களில், சொந்த தொகுதியை விட்டு, வேறு தொகுதிக்கு பணிபுரிய சென்றவர்கள், தபால் ஓட்டு போட விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தபால் ஓட்டு போட விரும்புவோர், படிவம் 12 மற்றும் 12 "ஏ' நிரப்பி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விண்ணப்பங்கள் இணையதளத்திலும் வெளியிடப்பட்டன.வேறு தொகுதியில் பணிபுரிய சென்ற ஊழியர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
அந்த சான்றிதழுடன், தபால் ஓட்டு கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி அரசு ஊழியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 70 சதவீதம் பேருக்கு, தபால் ஓட்டு வழங்கப்பட்டது. மீதம், 30 சதவீத விண்ணப்பங்கள், தள்ளுபடி செய்யப்பட்டன.ஓட்டுச்சாவடி எண் குறிப்பிடாதது; ஓட்டுச்சாவடி எண்ணை தவறாக குறிப்பிட்டது; வாக்காளர் பட்டியலில், பெயர் இல்லாதது; பணி சான்றிதழ் இணைக்காதது போன்ற காரணங்களால், விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தபால் ஓட்டு பெற்றவர்கள், மே, 15ம் தேதி மாலை வரை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை முன் வைக்கப்பட்டிருக்கும், ஓட்டுப் பெட்டியில், ஓட்டு போடலாம். தபாலில் வரும் ஓட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மே, 16ம் தேதி, காலை, 8:00 மணி வரைஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி