தமிழகத்தில் உள்ள, 570 பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாடுகளை, தேர்ச்சி சதவீத அடிப்படையில் வெளியிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது.
2011 முதல், 2013 வரையிலான, மூன்று ஆண்டு தேர்ச்சி விவரம் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி,நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', நேற்று முன்தினம், அதிரடி உத்தரவை பிறப்பித்தது.இரு வாரங்களில்...'மாணவர்களின் நலன் கருதி, ஒரே மாதிரியான பெயர்களைக்கொண்ட கல்லுாரிகளின் பட்டியலை, அவற்றின், 'கோடு' எண்ணுடன், தனியாக, அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அனைத்து வகை பொறியியல் கல்லுாரிகளில், மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, இரு வாரங்களில் வெளியிட வேண்டும்' என, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அனைத்து வகை பொறியியல் கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீத விவரங்களை தயாரிக்கும் பணியில், அண்ணா பல்கலை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.கடந்த, 2002 முதல், 2005 வரையிலும், பின், 2008 முதல், 2010 வரையிலும், பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாட்டின் அடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சி சதவீத விவரங்களை, அண்ணா பல்கலை வெளியிட்டது. பின், இந்த நடைமுறையை நிறுத்திக்கொண்டது.தற்போது மீண்டும்,தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, அண்ணா பல்கலைவெளியிட உள்ளது.கலந்தாய்வில் முடிவு:பல்கலை வட்டாரம் கூறுகையில், '2011 முதல், 2013 வரையிலான, மூன்று ஆண்டு களில், 570 பொறியியல் கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.
பல்கலையில், அனைத்து விவரங்களும் உள்ளன. எனவே, 10 நாட்களுக்குள், பல்கலை இணையதளத்தில் (www.annauniv.edu) பொறியியல் கல்லுாரிகளின் தேர்ச்சி விவரம் வெளியிடப்படும்' என, தெரிவித்தது.புள்ளி விவரம் வெளியானால், கல்லுாரி களின் தரத்தை, மாணவர்கள் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப கலந்தாய்வில் முடிவெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி