உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே 8ஆம் திகதியை உலக செஞ்சிலுவை தினமாக அனைத்து நாடுகளிலும் 1948ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வரப்படுகின்றது.
முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்ட போது செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த மூன்று நாள் யுத்த நிறுத்தமே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாகக் கொண்டாடப்பட்டு வரப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் செஞ்சிலுவைச் சங்க நாள் எனக் குறிப்பிடப்பட்டு வந்த இந்த நாள், பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்பட்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி