திருப்பூர் மாவட்டத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த, பட்டியல் தயாரிக்கும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.
வரும் 2014-15ம் கல்வியாண்டில், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பலவற்றை,மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியலை, மாவட்டம் வாரியாக தயாரித்து அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள பகுதியில், உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கூடாது. அருகருகே, மேல்நிலைப்பள்ளிகள் இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு மேல்நிலைப்பள்ளியை அங்கு உருவாக்கக் கூடாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.பள்ளிகளை தரம் உயர்த்த, பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
அவ்வகையில், கடந்தாண்டுகளில் பங்கு தொகை பெற்ற பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து,பங்குத்தொகை செலுத்திய பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தரம் உயர்த்த வேண்டிய உயர்நிலைப்பள்ளிகள், முன்னுரிமை அளிக்க வேண்டிய பள்ளிகள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியில், மாவட்ட கல்வித்துறைஅதிகாரிகள் உள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி