தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து, கல்லூரி சேர்க்கை தொடங்கியுள்ள இந்நேரத்தில்,
சென்னை கிறிஸ்தவ கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலையும், ஒரு புரட்சிகர திட்டத்தை கொண்டுவந்துள்ளன.
தங்களின் விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தில், பாலினம் குறித்து குறிப்பிடும்இடத்தில், மூன்றாவது பாலினத்தை(திருநங்கை) குறிப்பிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 15ம் தேதி, திருநங்கைகளை, மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். அதன் அடிப்படையில், அவர்கள், அங்கீகாரத்தின் அடிப்படையில், பணியிடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நுழைந்து செயல்படும் வாய்ப்பை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருநங்கைகள் தொடர்பாக, சில முன்னோடி நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென்று ஒரு பிரத்யேக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளதோடு, குடும்ப அட்டைகளில், அவர்களுக்கென்று T ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
manithargalai pirantha thirunangaikalukku magathana vetri. vazthukkal bro.and sis. inimelavathu ungal vazkkai nilai uyaravendum.
ReplyDelete