தமிழகம் முழுவதும், வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வு, இன்று காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கிறது. 10 லட்சம் பேர்,தேர்வு எழுதுகின்றனர்.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா கூறியிருப்பதாவது:வி.ஏ.ஓ., தேர்வை, 10 லட்சத்து, 8,662 பேர் எழுதுகின்றனர். 3,628 தேர்வு அறைகளில், தேர்வு நடக்கிறது. அனைத்து தேர்வு அறைகளிலும், வீடியோ கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு அறைக்குள், மொபைல் போன், கால்குலேட்டர் உள்ளிட்ட, மின்னணு சாதனங்கள் எதையும் கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்களை, அவர்களின் தேர்வு செல்லாதவை என அறிவிப்பதுடன், தொடர்ந்து தேர்வெழுத தடை விதிக்கப்படும்.இவ்வாறு, ஷோபனா தெரிவித்துள்ளார்.வருவாய்த் துறையில், 2,342 வி.ஏ.ஓ., பணிஇடங்களை நிரப்ப இந்த போட்டித் தேர்வு நடக்கிறது. 200 அப்ஜக்டிவ் டைப் கேள்வி களுக்கு, தலா, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
CLUE TO FIND OUT WHEN TET POSTING!!!!! 1). When temporary B.T teachers (4000 rupees) are withdrawn.., we get the signal of immediate posting. 2). If govt extends them further, delay of posting. Govt extended temporary b.t teachers until June end..... We should wait and see whether govt withdraws the scheme or extends the scheme.
ReplyDelete