இந்தியா முழுவதும் எந்த பகுதிக்கு சென்றாலும் மொபைல் நம்பரை மாற்றாமல், ரோமிங் கட்டணம் இல்லாமலும் பேசும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எம்.என்.பி., (நேஷனல் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி) மூலம் இந்த முறையை கொண்டு வர மத்திய அமைச்சகத்தின் தொலைத் தொடர்பு கமிஷன் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ட்ராயிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஒப்புதல் கிடைத்தவுடன் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு சென்று நமது மொபைல் நம்பரை பயன்படுத்த ரோமிங் கட்டணம் செலுத்தி,எஸ்.டி.டி., கட்டணத்தை அழைப்புக்களை பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது.
intha news last 2 yrs ah varuthu but roaming cancel agavillai.
ReplyDelete