பதினோராம் வகுப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் திங்கள்கிழமை முதல் பாடநூல் கழக, விற்பனைப் பிரிவில் கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திங்கள்கிழமை 11-ஆம் வகுப்புகள் தொடங்க உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு அவை திங்கள்கிழமை முதல் வழங்கப்படும்.தனியார் பள்ளிகள் பாடநூல் கழக குடோன்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சில தனியார் பள்ளிகள் பாடப் புத்தகங்களை பெற்று கொண்டுள்ளன. பல பள்ளிகளில் மாணவர்களே புத்தகங்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பெற்றோர்களும், மாணவ - மாணவிகளும் பாடநூல் கழகம் மற்றும் டிபிஐ அலுவலகத்துக்கு சென்றும் புத்தகங்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.இது குறித்து பாடநூல் கழக அதிகாரி, "அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்கள்அனுப்பப்பட்டு உள்ளன. மேலும் தனியார் பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை குடோன்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.திங்கள்கிழமை முதல் பாடநூல் கழக, விற்பனைப் பிரிவில் பாடப் புத்தகங்கள் கிடைக்கும். சென்ற ஆண்டு விற்ற அதே விலையில் கிடைக்கும்' என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி