உதவி தொடக்க கல்வி அலுவலர் 156 பேருக்கு மாறுதல் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

உதவி தொடக்க கல்வி அலுவலர் 156 பேருக்கு மாறுதல் உத்தரவு

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில், 156 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது. இயக்குனர் இளங்கோவன் தலைமையில், 'ஆன் - லைன்' வழியில், 32 மாவட்டங்களிலும், கலந்தாய்வு நடந்தது. இதில், 344 அலுவலர்கள் பங்கேற்றனர். 156 பேர், விருப்பமான இடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு உடனே, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டன. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பணி மாறுதல் கலந்தாய்வும், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏழு தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பணி மாறுதல் பெற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி