கணினி ஆசிரியர்கள் - பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஜூன் 15 முதல் வீடுகளில் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

கணினி ஆசிரியர்கள் - பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஜூன் 15 முதல் வீடுகளில் உண்ணாவிரதம்.


தமிழகத்தில் பணி நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், மீண்டும் பணி கோரி, ஜூன் 15 முதல் அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவர்கள் எழுதிய கடிததத்தில் கூறியுள்ளதாவது:1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக, மாதம் ரூ.2 ஆயிரம்சம்பளம்பெற்று, வேலைக்கு சேர்ந்தோம். 2007 ல் அரசு கணினி பயிற்றுனராக நியமிக்கப்பட்டோம். 14 ஆண்டுகள் இளமை, அறிவையும் மாணவர்களுக்காக அர்ப்பணித்தோம். தற்போது 45 வயதை கடந்த நிலையில், 2013ல் நீக்கப்பட்டோம். பல கடன்கள் பெற்று, திருப்பி செலுத்த வழியின்றி, குடும்பத்தினர் கஷ்டத்தில் உள்ளனர். 2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 50 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என, முதலில் கூறப்பட்டு பின்னர், 35 சதவீதம் போதும் என எங்களை பணியில் சேர்த்தனர். பிறகுநடத்தப்பட்ட மறுதேர்வில், 42 கேள்விகள் தவறு என முறையிட்டோம். சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவும் வினாத்தாளை ஆய்வு செய்து, '20 கேள்விகள் முற்றிலும் தவறு.

ஏழு கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை' என தெரிவித்தது. 27 கேள்விகள் தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியும். தவறான கேள்விகள் என கண்டறியவே தேர்வு எழுதிய மூன்று மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்தது. தவறான கேள்விகள் கொடுத்து எங்கள் வாழ்வை சீரழித்து விட்டனர். நடந்து முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 21 தவறான கேள்விக்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் 5 தவறான கேள்விக்கும், பிளஸ் 2 கணித தேர்வில் கூட, 6 தவறான கேள்விகளுக்கும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது நினைத்தால் கூட எங்களுக்கு வழங்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.

2 comments:

  1. 652 கணினி ஆசிரியர்களின் நிலைமையை ஒரு சக ஆசிரியராக புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும் தற்போது பி.எட் முடித்து வேலைக்காக பல ஆண்டுகள் காத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதே 2000/- 3000/- சம்பளத்துக்கு 10 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து இருப்போரையும் கருத்தில் கொள்ள வேண்டும். 15 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் பணி புரிந்திருந்தாலும் ஒப்பந்தப்படிதானே. எந்த ஒத்தரவதமும் இல்லையே. மேலும் கணினி ஆசிரியர்கள் எதன் அடிப்படையில் பணி அமர்த்தப் போகிறார்கள் என்ற தகவலும் இல்லையே. ஒரு வேலை பதிவு மூப்பு எனில் நீங்களே முன்னிலையில் இருப்பீர்கள். தேர்வு என்றாலும் 15 ஆண்டுகால அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். மேலும் தற்போது வேலைக்காக காத்திருப்போரும் பயன் அடைவர்.

    ReplyDelete
  2. 652 கணினி ஆசிரியர்களின் நிலைமையை ஒரு சக ஆசிரியராக புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும் தற்போது பி.எட் முடித்து வேலைக்காக பல ஆண்டுகள் காத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதே 2000/- 3000/- சம்பளத்துக்கு 10 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து இருப்போரையும் கருத்தில் கொள்ள வேண்டும். 15 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் பணி புரிந்திருந்தாலும் ஒப்பந்தப்படிதானே. எந்த ஒத்தரவதமும் இல்லையே. மேலும் கணினி ஆசிரியர்கள் எதன் அடிப்படையில் பணி அமர்த்தப் போகிறார்கள் என்ற தகவலும் இல்லையே. ஒரு வேலை பதிவு மூப்பு எனில் நீங்களே முன்னிலையில் இருப்பீர்கள். தேர்வு என்றாலும் 15 ஆண்டுகால அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். மேலும் தற்போது வேலைக்காக காத்திருப்போரும் பயன் அடைவர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி