1800 அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் தொய்வு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2014

1800 அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் தொய்வு - தினமலர்

தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் 1800 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் என்ற அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வு

ஏற்பட்டுள்ளது.'இத்திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஏ.,) 5 கி.மீ.,க்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என்ற அடிப்படையில் 2015க்குள் தமிழகம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2009-10ல் 200; 2011-12ல் 345; 2012-13ல் 710; கடந்த ஆண்டு 50 பள்ளிகள் என, 1,300 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில் இலக்கு நிறைவேறுமா என சந்தேகம் எழுந்துஉள்ளது. இதற்கான நடவடிக்கை தொய்வாக இருக்கிறது என ஆசிரியர்கள் சங்கங்கள் கூறுகின்றன.சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரித்து, கல்வியை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தப்படி 2015க்குள் 1800க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

1 comment:

  1. 2012-2013 TRB No. of vacancies 14,000 instead of 55,000 for
    Ex.Edu.Minister statment

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி