டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடி வுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 14ம் தேதி எழுத்து தேர்வை நடத்தியது. இதற்காக மாநிலம் முழுவதும் 243 மையங்களில் 3,628 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம், 10 லட்சத்து 8,662 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதி னர். 2 லட்சத்து 45 ஆயிரத்து 662 பேர் தேர்வு எழுத வரவில்லை.இந்நிலையில் விஏஓ எழுத்து தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி தனதுஇணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpsc exams.net பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் வருகிற 24ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இது குறித்து டி.என்.பி. எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆன்சர் கீ தொடர்பாக ஆட்சேபணைஇருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்யும். அதன் பின்னர், புதிய ஆன்சர் கீ வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை குறைந்த பட்சம் 3 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Group2 interview post exam mudindhu 7 months aayiduchi.... eppo result nu...theriyala...
ReplyDelete