சீருடை அணிந்திருந்தால் மாணவர்களுக்கு அனுமதி: அரசு பஸ்சில் சலுகை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2014

சீருடை அணிந்திருந்தால் மாணவர்களுக்கு அனுமதி: அரசு பஸ்சில் சலுகை.


பழைய பஸ் 'பாஸ்' இல்லாத மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால், அரசு டவுன் பஸ்சில் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவசமாக செல்ல பஸ் 'பாஸ்' வழங்கப்படுகிறது. நடப்புக் கல்வி ஆண்டிற்கான புதிய 'பாஸ்' தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. 'புது 'பாஸ்' வழங்கும் வரை, கடந்த ஆண்டிற்கான 'பாஸ்'களை பயன்படுத்தலாம்' என அரசு அறிவித்திருந்தது. பெரும்பாலான மாணவர்கள், இறுதித்தேர்வு முடிந்தவுடன் பழைய 'பாஸ்'களை பத்திரப்படுத்தவில்லை. இவர்கள் டிக்கெட் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க, புதிய 'பாஸ்' வழங்கும் வரை மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால் இலவசமாக பயணம் செய்யலாம் என கண்டக்டர்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

1 comment:

  1. சில வழி தடங்களில் பேருந்துகள் பள்ளி மாணவர்களின் சீருடையை பார்த்தலே பேருந்துகளை பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதே கிடையாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி