ஆனால்,துரோகம்,ஆங்கிலேயே ஆதிக்க மனோபாவம் எல்லாமும் அவரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தன என்பது கசப்பான உண்மை. ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தியா முழுக்க அளவையியல் செய்கிற பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொழுது அவருக்கு நல்ல கணித மேதைமை உள்ள ஒரு ஆள் தேவைப்பட்டார்.
பத்தொன்பது வயது சிக்தரை கொண்டு வந்து நிறுத்தினார்கள். கோள திரிகோணவியலில் பையன் புலி என்று சொல்லியிருந்தார்கள். அசுர பாய்ச்சல் காட்டினார் அவர். இவரின் திறமையை பார்த்து அசந்து போன எவரெஸ்ட் வேறு வேலைக்கு போகிறேன் என்று சொன்ன இவரை அப்படியெல்லாம் போகக்கூடாது என்று தடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். பின்னர் வானிலைத்துறையில் முக்கிய பொறுப்புக்கு வந்து அங்கேயும் கலக்கி எடுத்தார்.
அந்த சிகரத்துக்கு அந்தந்த ஊரின் பெயரை வைப்பது என்பதே வழக்கம். ஜார்ஜ் எவரெஸ்ட்டுக்கு மரியாதை செலுத்த எண்ணிய வாக் எவரெஸ்ட் விரும்பாவிட்டாலும் அச்சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் சூட்டினார்.
எவரெஸ்ட் சிகரத்தை கண்டே இராதவரின் பெயரை அது தாங்கி நிற்கிறது. அதனை உலகின் உயரமான சிகரம் என்று கண்டுபிடிதுச்சொன்ன சிக்தரை வரலாற்றின் இருட்டு மூலையில் தள்ளிவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். மிகப்பெரிய திரிகோணவியல் அளவையியல் என்கிற அந்த அளவையியலில் ஈடுபட்ட நைன் சிங் மற்றும் சிக்தர் ஆகிய இருவரின் நினைவாக அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது.


This comment has been removed by the author.
ReplyDelete
Deleteஅனைத்து கல்விச்செய்தி நண்பர்களுக்கும் வணக்கம்
1, அரசாணையும் வந்து விட்டது
2.இறுதிபட்டியலும் தயாராகிகொண்டு உள்ளது
உங்களுக்கு பணி கிடைக்க இதுவே இறுதி வாய்ப்பு
வருகின்ற திங்கள்கிழமை
(9-05-2014)காலை 10 மணி அளவில் 90 மற்றும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவரும் trb வர வேண்டும்
குறிப்பு : புது வெயிட்டேஜ் முறையில் 70 க்கு குறைவானவர்கள் கண்டிப்பாக வர வேண்டும்
அடுத்தவர்களின் பணியை நீங்கள் பறிக்க வில்லை
உங்களுக்கு உரிய பணியை காப்பாற்றி கொள்ளுங்கள் நாம் அமைதியான முறையில் TRB யிடம் மனு கொடுப்போம் பின் முக்கிய முடிவுகள் எடுப்போம்
இனிமேலும் அமைதியாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் இருக்கு வேண்டியதுதான்
இதுவே இறுதி வாய்ப்பு
உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!
Deleteநாளைய விடியல் நமக்கு நல்லதாய் அமையட்டும்.....
Ithaiyum Vittu Vaika Villaiya BRITISH VERIYARGAL.
ReplyDeleteARUMAI SRI Sir, ungal pani menmelum Thodara VAZHTHUKAL