ஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு DINAMALAR News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2014

ஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு DINAMALAR News


அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கில புலமை இல்லாத ஆசிரியர்கள்மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், மாணவரின்கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐந்து ஆங்கில வழி பள்ளி

அரசு பள்ளிகளில் மாணவரின் சேர்க்கை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், 2011ம் ஆண்டு முதல், தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்துஆங்கில வழி பள்ளி துவங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழித்திட்டம், கடந்த கல்வி ஆண்டு முதல்,உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.அதற்காக, ஆங்கில வழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, ஆங்கில போதனை எடுக்கப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியில் ஆங்கில வழி படிக்கும் மாணவர்கள், ஆங்கில புலமை பெற்றவர்களாக இல்லை. அதற்கு முக்கிய காரணம், ஆசிரியர்கள், ஆங்கில புலமையுடன் பாடம் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுஉள்ளது.பெயரளவில் நடத்தப்படும் ஆங்கில வழி அரசு பள்ளிகளில், தமிழ்வழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களே, ஆங்கில வழி வகுப்பும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான ஆசிரியர்கள், தமிழ்வழி ஆசிரியர் பட்டப்படிப்புகளை படித்துவிட்டு, தமிழில் போட்டித் தகுதித் தேர்வையும் எழுதிவிட்டு, பணியில் சேர்ந்தவர்கள் தான்.துவக்கப் பள்ளியில், ஆங்கில பாடங்களை எடுப்பது எளிதாக இருந்தாலும், உயர்நிலை வகுப்புகளில் ஆங்கில வழிப்பாடங்கள் எடுப்பது சிரமம். அதனால், ஆங்கில அறிவு மற்றும் புலமை இல்லாத தமிழ்வழி பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆங்கில வழி வகுப்புகளை எடுக்க முடியாமல் தவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முப்பருவ கல்வி திட்டம்

கல்வி அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசு, மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக, தமிழ்வழி மாணவருக்கு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து, முப்பருவ கல்வி திட்டத்தை, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தி, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் அக மற்றும் புற மதிப்பீட்டின் கீழ், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொண்டது.அதேபோல், ஆங்கிலவழி வகுப்புக்கும் முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில், ஆறு, ஏழு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு முப்பருவ ஆங்கில வழிக்கல்வி திட்டத்தைஅமல்படுத்தி உள்ளது. அதற்காக, ஆங்கில வழி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, அவை பள்ளிக்கு அனுப்பும் பணி துவங்கிவிட்டது. முன்னதாக, ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதில், மேற்கண்ட மூன்று வகுப்புக்கும், ஆங்கிலவழிக் கல்வி வகுப்பை துவங்கி, தமிழ்வழி வகுப்பு எடுத்த ஆசிரியர்களை கொண்டு, ஆங்கில வகுப்பை எடுக்க வேண்டும். அதனால், கோடை விடுமுறையில், ஆங்கில வழி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் உத்தரவு நடைமுறைப்படுத்துவது ஒருபக்கம் இருந்தாலும், அவை முழுமையடையாத உத்தரவாகவே உள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும்90 சதவீத ஆசிரியர் தமிழ்வழி படித்து, ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள். அவர்களுக்கு, ஆங்கில வழிப்புலமை, துவக்கப்பள்ளி குழந்தைக்கு எடுப்பதற்கு மட்டுமே வாய்ப்புண்டு.

பெற்றோர் அதிருப்தி

உயர்நிலை வகுப்புக்கு ஆங்கில பாடத்தை எடுக்க அறிவுறுத்துவது இயலாத காரியம். அவர்களுக்கு என்னதான் பயிற்சி கொடுத்தாலும், ஆங்கில புலமையின்றி வகுப்பு எடுக்கமுடியாது. அவர்கள் மீது, கல்வித்துறை ஆங்கில திணிப்பு செய்வதால், ஆங்கில வழியில் மாணவரை சேர்க்க விரும்பும் பெற்றோரும்,அதிருப்தி அடைகின்றனர்.ஆங்கில வழி புலமை பெற்ற ஆசிரியர்களை கொண்டு, ஆங்கில வழித்திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே, தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக, அரசு பள்ளி மாணவரும் ஆங்கில புலமை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

26 comments:

  1. புதிய ஆசிரியர்களை பணிநியமணம் செய்தால்தான் இதற்கு தீர்வு தனியார் பள்ளியில் பணிபுரிந்த அனுபவம் பெரிதும் உதவும்

    ReplyDelete
    Replies
    1. GO vai ethirpaarpathu KADANTHA KAALA OIVU PETRA ARASU UZHIYAR

      (AASIRIYAR) PENSION KAAGA POSTMAN i ethirpaarthu kaarthirupathu pol ullathu

      NAMATHU NILAI. INDRAAVATHU VIDYUM ENA ETHIRPARPOM..............

      Delete
  2. Government school la students admission kuraya karanam thinamalar sethiye , valga umathu pani, thanks to metric school

    ReplyDelete
  3. போராட தயார் ஆகுங்கள். நமது எதிர்ப்பபை காட்டுவோம். அனைவரும் தலைமை செயலகம் செல்வோம்

    ReplyDelete
  4. தனியார் பள்ளிக்கூடம் பணிபுரிந்த ஆசிரியர்களைக் கொண்டு பணிநிரப்ப வேண்டூம் நான் 8 வருடம் தனியார் பள்ளியில் ஆங்கில புலமையுடன் வகுப்புகளை எடுத்த அனுபவம் உண்டு ஏன் அரசு பயன்படுத்த கூடாது

    ReplyDelete
  5. புதிய ஆசிரியர்களை கொண்டூ திறமையாக ஆங்கில வகுப்புகளை எடுக்க முடியும்

    ReplyDelete
  6. தமிழ்வழிக்கல்வியினால் எந்தபயனும் இல்லை அதற்கு தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு

    ReplyDelete
    Replies
    1. pavi, neega solluradhu sari illa

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Hello pavi dont say like that.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜயகுமார் சார்....

      Delete
    2. TRB INIYAAVATHU PROCEED PANAAL POTHUM.

      THANK YOU VIJAYAKUMAR SIR...........

      Delete
    3. Nandri + santhosam sir. Valakkugalin nilai ?

      Delete
    4. Really? HAPPY.............. if TRB sleeps again..... we must protest,,,,, ,,wait for two days....... otherwise join with us to protest before TRB

      Delete
    5. INTHA NEWS UNMAIYA MR.VIJAYA KUMAR SIR UNGALUKKU EPPADI THERIUM, THEVAI ILLAMA PURALIYA KELAPATHINGA SIR......

      Delete
  10. thinamum netcard pottu balance than waste aguthu. ple cm

    ReplyDelete
  11. i am also english major . i have low weitage . but i never worry about .because next tet la i get good marks 'i believe it .now i study very hard now.when will come next tet exam ? all tet friends i wish you

    ReplyDelete
  12. Sir ungal thannambikkaikku enadhu enadhu manarndha parattukkal!.thangalin nalla manasukku 2013 TET ll posting kidaikkavittal 2014 TET ll adhika marks petru posting petru oru sirandha teacher aaga enadhu manamarndha
    nalvaalthukkalai therivithu kolkiren .

    ReplyDelete
  13. vantha nallathuthan and hai friend pg case pathy yarukavathu theriumma therinja pls update pannunka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி