தட்டச்சு தேர்வுகள் ஆக. 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

தட்டச்சு தேர்வுகள் ஆக. 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன.


தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப இயக்ககம் சார்பில் தட்டச்சுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிரி&ஜூனியர், 8ம் வகுப்பு முடித்தவர்கள்ஜூனியர் பிரிவுக்கும், ஜூனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் சீனியர் பாடத்திற்கும் தேர்வு எழுதலாம்.இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிட்டன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 23ம் தேதி ஜூனியர் இளநிலை தேர்வும், 24ம் தேதி சீனியர் தேர்வு, உயர்வேகம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி