தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிடக் குறைவான கட்டணத்தில் மொபைல் 3-ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பி.எஸ்.என்.எல்.(சென்னை வட்டம்) துணைப் பொது மேலாளர் என்.மோகன் வெளியிட்ட செய்தி:
மொபைல்போன் 3-ஜி சேவையில் ஒரு ஜி.பி திட்டங்களுக்கான கட்டணம், போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.140-ஆகவும், பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.155-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களை விடக் குறைவாகும். இதே போல வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை வழங்கி வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amount konjam dan but 3G tower ella pakamum sariya kedaika matudhu neraya place la 3G tower vacha romba nalla irukum ennoda chinna vendugol..
ReplyDelete