முதன்மை பத்திரிகை ஆசிரியராக திகழும் இளம் பள்ளி மாணவர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2014

முதன்மை பத்திரிகை ஆசிரியராக திகழும் இளம் பள்ளி மாணவர்!


வெறும் 16 வயதில், ஒரு பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக திகழ்ந்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் 11ம் வகுப்பு படிக்கும்டில்லி மாணவர் சகில் பன்சால்.

Inkspire என்ற பெயருடைய ஒரு கலைப் பத்திரிகையின்(art magazine) முதன்மை ஆசிரியராக அந்த மாணவர் திகழ்கிறார்."படைப்புத்திறன் பெற்றவர்கள், தங்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு களம்தான் இந்தப் பத்திரிகை" என்கிறார் அந்த மாணவர். இவர் டில்லியின் பப்ளிக் ஸ்கூலில் படிக்கிறார்.இவரின் சாதனையைப் பாராட்டி, CBSE தலைவர் வினித் ஜோஷி, ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்.Inkspire பத்திரிகை குழுவில், ஏற்கனவே 600 பேர் இணைக்கப்பட்டுள்ளார்கள். போட்டோகிராபர்கள், கிராபிக் டிசைனர்கள் மற்றும் Musicians போன்ற பணி நிலைகள் அவற்றுள் அடக்கம்."சோசியல் மீடியாவை நான் பிரபலப்படுத்துவதற்காக பயன்படுத்துவேன்" என்று சகில் பன்சால் கூறுகிறார்.2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் Inkspire என்ற பெயரில் ஒரு facebook page தொடங்கப்பட்டது.

பின்னர் அது சட்டப்பூர்வமாக்கப்பட்டது.உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலைஞர்களை Inkspire ஈர்த்ததாலும், பலர் பன்சாலை அணுகியதாலும், தற்போது, Inkspire, பத்திரிகையாக வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி