மொழிவழி மாநிலங்கள் உருவானதால் " சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் " என்ற அமைப்பின் பெயர் " தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி "
என மாற்றம் பெற்றது.
ஆசிரியர்களுக்குப் பென்ஷன் , கிராஜுவிடி ஆகிய கோரிக்கைகள் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.
இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு, மாவட்டக் கழகம், தனியார் பள்ளிகள் என நிர்வாக அடிப்படையில் வேறுபட்ட ஊதியங்கள் அளிக்கப்பட்டதை மாற்றி , நிர்வாக வேறுபாடின்றி ஒரே ஊதிய விகிதம் அளிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் வலியுறுத்தியது.
கோரிக்கைகளை ஏற்க வைத்து, அரசின் ஆணைகளையும் பெற்றது சாதனை எனப் பாராட்டப்பட்டன.
இயக்கத்தின் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து மாவட்டக் கழக ஆசிரியர்கள் கூட்டணியில் ஈர்க்கப்பட்டனர். சங்கப் பொறுப்புகளையும் ஏற்றனர்.
-வரலாறு தொடரும்...
இளம் ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர் இயக்க வரலாறினை தெரிந்துகொள்வதற்காகவும்,
போராட்ட உணர்வினை அவர்களிடம் வளர்க்கவும்
"ஆசிரியர் இயக்க வரலாறு "
என்ற பக்கத்தினை உருவாக்கி பதிவு செய்து வருகிறேன் தோழர்களே...
பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
https://m.facebook.com/profile.php?id=1475366869376303
This very important??.??????
ReplyDeleteIt is very usefull....full support for u
ReplyDelete