கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 30ம் தேதி தொடங்கும்என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள சிறப்புப் பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு 30ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 31ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணபித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த மூன்று படிப்புகளுக்கும் மொத்தம் 320 இடங்கள் இருப்பதாகவும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தப் படிப்புகளுக்காக மொத்தம் 18ஆயிரத்து 78 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி