பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2014

பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு.


திங்கள்கிழமை (ஜூலை 14) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வுசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்புக்கானமாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி 3நாள்கள் நடைபெறுகிறது.அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை,பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14, 15, 16 தேதிகளிலும்,பிபிடி, பி.பார்ம் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு ஜூலை 17-ஆம்தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில்கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம்பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்கள்இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவை அல்லாது விண்ணப்பித்த மாணவ,மாணவிகளுக்கு கலந்தாய்வு குறித்து விரைவு அஞ்சல் மூலமும் அழைப்புக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்எம்எஸ் மூலமும் தகவல்அனுப்பப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி